ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள மெர்சல் படம், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்சில் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் மத்திய மாநில அரசுகளை கோபப்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அமைச்சர்கள் நேரடியாகவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். இது குறித்து படத்துக்கு சான்றிதழ் வழங்கிய சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகன் கூறியிருப்பதாவது:
மெர்சல் படத்தில் யாரையும் பாதிக்கிற வகையிலோ, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலோ வசனங்கள் இல்லை. கருத்துரிமை அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வரி தொடர்பான காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படத்தில் காட்சிகளை நீக்க வேண்டும் என்றால் அதற்கு தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்கிறார் மதியழகன்.