ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீப காலமாக டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு கணக்கை ஆரம்பித்து பல குறுக்கு வழிகளில் தங்களுக்கென அதிகமான தொடர்பாளர்களைச் சேர்த்துக் கொண்டு சினிமாவையும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களையும் கண்டபடி விமர்சிப்பது என்பது வழக்கமாகிவிட்டது. தங்களைப் பற்றி விமர்சிக்காமல் இருக்க சிலர் அப்படிப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
ஹிந்தித் திரையுலகத்தில் கமால் ஆர் கான் என்பவர் தன்னை விமர்சகராகவும், சினிமா வியாபாரப் புள்ளியாகவும் சொல்லிக் கொண்டு திரைக்கு வரும் படங்களைப் பற்றி தாறுமாறாக விமர்சிப்பதையும், முன்னணி நடிகர்களைப் பற்றி தரக்குறைவாகக் குறிப்பிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். எந்த ஒரு முன்னணி நடிகரையும் அவர் விட்டு வைத்ததில்லை.
ரஜினிகாந்த் உட்பட பலரையும் கிண்டலடித்திருக்கிறார். அவருடைய டுவிட்டர் பதிவுகளைப் பற்றி பலரும் டுவிட்டர் நிறுவனத்திற்கு புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவருடைய டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் சஸ்பென்ட் செய்துவிட்டது. அதே சமயம் கமால் ஆர் கான் யு டியூபில் விமர்சனம் செய்வதை நிறுத்த மாட்டார் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.
தமிழிலும் இது போன்று பலர் செயல்பட்டு வருகிறார்கள், அவர்கள் மீதும் தமிழ்த் திரையுலகத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.