சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
ஒரு காலத்தில் சின்னத்திரையில் நட்சத்திரமாக கலக்கியவர் பிரஜின். பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காதலிக்க நேரமில்லை தொடர்களில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அவ்வப்போது சிறிய கேரக்டர்களில் சினிமாவில் நடித்து வந்த பிரஜின் தீ குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. சுமார் 10 வருடங்கள் சினிமாவில் போராடி விட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் வருகிற அக்டோர் 2ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் சின்னத்தம்பி தொடரில் நாயகனும், சின்னத் தம்பியும் அவர்தான். ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கிராமத்து கதை. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் சின்னத்தம்பி, பட்டணத்தில் இருந்து ஊருக்கு வரும் ஒரு திமிரான பெண்ணை எப்படி அடக்குகிறான் என்பதுதான் கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.