ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் ஆண்டனியை வைத்து 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கிய சசி, அப்படம் வெற்றிப் படமாக அமைந்ததைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியானார் இயக்குநர் சசி.
தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை முடித்து விட்டநிலையில் அந்தப் படத்திற்கு 'இரட்டைக் கொம்பு' என்று டைட்டில் வைத்திருக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குநர் சசி விரைவில் வெளியிடவிருக்கிறார்.
இரண்டு ஹீரோக்களையும் குறிக்கும் வகையிலேயே படத்துக்கு 'இரட்டைக் கொம்பு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பார்த்தால் இது ஒரு காமெடி என்று தோன்றுகிறது.