ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குடிபோதையில் காரை ஓட்டி சென்று விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார் நடிகர் ஜெய். இந்த சம்பவத்தின் போது நடிகர் பிரேம்ஜி அமரனும் உடன் இருந்திருக்கிறார்.
நடிகர்கள் ஜெய், பிரேம்ஜி அமரன் இருவரும் சென்னை 28, கோவா, நவீன சரஸ்வதி சபதம், சென்னை 28 - II உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் நல்ல நண்பர்கள்.
இந்நிலையில் நடிகர் ஜெய் இன்று(செப்.,21) அதிகாலை சென்னை மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி தனது ஆடி காரில் வேகமாக பயணித்திருக்கிறார். உடன் பிரோம்ஜி அமரனும் சென்றுள்ளார். இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற கார், சென்னை அடையாறு மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீதி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
குடிபோதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஜெய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதோடு அவர் பயணித்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் ஜெய், சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.