14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நடிகர் அக்ஷ்ய் குமாரை ஹீரோவாக வைத்து சல்மான் கான் மற்றும் கரண் ஜோகர் இருவரும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. பின்னர் சல்மான் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. சல்மான் விலகியதால் கரண்-அக்ஷ்ய் இணைந்து வரலாற்று சம்பவமான சராகரி போரை பின்னணியாக கொண்டு ஒரு படத்தை உருவாக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கூட செய்தி வெளியானது.
இந்நிலையில், இப்போது சல்மானும், கரணும் இணைந்து, அக்ஷ்யை வைத்து விளையாட்டு சம்பந்தமான படத்தை எடுக்க இருக்கிறார்களாம். தற்போதைய சூழலில் வரலாற்று படம் வேண்டாம் என்று சல்மான் கூறியுள்ளதாகவும், இதற்கு அக்ஷ்ய், கரண் இருவரும் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகததால் குழப்பமான சூழலே நிலவுகிறது.