14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் விக்ரம். அதனால் அவருக்கு ஏராளமான இழப்புகள். திட்டமிட்டபடி படங்கள் முடியாமல் இழுத்துக் கொண்டபோகும் சூழல் அடிக்கடி ஏற்பட்டதால் புதிய படங்களை கமிட் பண்ண முடியாமல் அவதிப்பட்டார். இது தொடர்கதையாகிப்போனதால் தற்போது தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் விக்ரம்.
அவரது கைவசம் இப்போது 3 படங்கள்! விஜய் சந்தர் இயக்கும் 'ஸ்கெட்ச்' படம் அவற்றில் ஒன்று. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'துருவநட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விக்ரம் இம்மாதம் 24-ஆம் தேதி சென்னை திரும்புகிறார். 25-ஆம் தேதி முதல் ஹரி இயக்கத்தில் 'சாமி-2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கவிருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் ஹரி.
டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், நெல்லை, பழநி கேரளா என்று பல இடங்களிலும் சாமி-2 படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இந்த படத்தின் கதையை ரெடி செய்வதற்கு மட்டும் 8 மாதங்களுக்கு மேல் டைம் எடுத்து வலுவான திரைக்கதையை, மிக மிக வேகமான கதையை அமைத்துள்ளார் ஹரி.
கடந்த ஜூன் மாதமே சாமி-2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், கௌதம் மேனன் செய்த குழப்பத்தினால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.