ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் வெளியான படம் கல்யாணம் சமையல் சாதம். இப்படம் ஹிந்தியில் சுப மங்கல் சாவ்தன் என்ற பெயரில் அதே பிரசன்னா இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது.
ஆனந்த் எல்.ராய் தயாரிக்க, ஆயுஸ்மான் குரானா, பூமி பத்னேகர் ஹீரோ-ஹீரோயின்களாக நடித்திருந்தனர். சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.34 கோடி வசூலித்து லாபத்தை கொடுத்திருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குநர் பிரசன்னா, சுப மங்கல் சாவ்தன் இரண்டாம் பாகமும் வெளிவரும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தயாரிப்பாளர் ஆனந்த் எல்.ராய்யிடம் ஏற்கனவே இரண்டாம் பாகத்திற்கான கதையை சொல்லிவிட்டேன். முதல்பாகத்திற்கு ரசிகர்கள் எந்தளவு வரவேற்பு கொடுக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்திருக்கிறதா என்று பார்ப்போம் என்றார். இப்போது படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. ஆயுஸ்மான், பூமி இருவரின் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். ஆகையால் இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என்றார் பிரசன்னா.