ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகில் இதுவரை இப்படி ஒரு நட்சத்திரக் கூட்டணி அமைந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, ஏ.ஆர். ரகுமான் என படிக்கும் போதே 'சைரா - நரசிம்ம ரெட்டி' படத்தின் மெகா மகா கூட்டணியை உணர முடிகிறது.
தென்னிந்தியப் படங்களில் பலர் கேட்டும் நடிக்காத அமிதாப்பச்சன், சிரஞ்சீவியே நேரடியாக அவரிடம் சென்று படத்தின் முக்கியத்துவத்தை விளக்கி நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார். சுதீப், 'நான் ஈ' படம் மூலம் ஏற்கெனவே தெலுங்கு மக்களிடம் நல்ல அறிமுகத்தைப் பெற்றவர். ஜெகபதி பாபு முன்னாள் வெற்றிகரமான நாயகன், இந்நாள் வெற்றிகரமான வில்லன்.
இப்படிப்பட்ட சிறந்த சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு தற்போது தமிழில் தனி அடையாளம் கொண்ட நடிகராக விஜய் சேதுபதிக்குக் கிடைத்திருப்பது பலரையும் பொறாமைப்பட வைத்திருக்கும். இது விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம். இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்து அவரை இந்திய அளவில், உலக அளவில் கொண்டு சேர்க்கலாம்.
வசூல் படங்களில் நடித்து பெயர் வாங்குவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இப்படிப்பட்ட சிறந்த படங்களில் நடித்து வாங்கும் பெயர்தான் நிலைத்து நிற்கும். அது விஜய் சேதுபதிக்குத் தொடர்ந்து கிடைக்கலாம்.