ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லொள்ளு சபாவில் இருந்து சினிமாவுக்குள் வந்த பல நடிகர்களில் சாமிநாதனும் ஒருவர். பல படங்களில் காமெடியன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சந்தானத்துடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில், வேதாளம் படத்தைத் தொடர்ந்து தற்போது அஜீத்தின் விவேகம் படத்திலும் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார் லொள்ளுசபா சாமிநாதன். இந்த படத்திற்காக பல்கேரியா சென்றிருந்தபோது, படப்பிடிப்பு நடைபெற்ற பில்டிங்கின் மாடியில் தான் ஒரு அறையில் இருவர் வீதம் அனைவரும் தங்கியிருந்தார்களாம். ஆனால், அதில் ஒரு அறையில் அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதாக சொல்லி அதில் தங்கியிருந்தவர்கள் வெளியேறி விட்டார்களாம்.
ஆனால் சாமிநாதன் தைரியமாக தங்கியிருந்தாராம். ஏற்கனவே தங்கியிருந்தவர்கள் சொன்னது போலவே, அமானுஷ்ய அறிகுறி தென்பட்டிருக்கிறது. என்றாலும், அதை கண்டு பயப்படாமல் அதே அறையில் 12 நாட்களாக தங்கியிருந்திருக்கிறாராம். மேலும் விவேகம் யூனிட் நபர்கள், ஒவ்வொரு நாளும் அவரிடம் இன்றைக்கு என்ன நடந்தது என்று அவரது திகில் அனுபவங்களை கேட்டுகொண்டேயிருந்தார்களாம்.