ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வசந்தகால பறவை, சூரியன், திருமூர்த்தி, கல்லூரி வாசல் படங்களை இயக்கிய பவித்ரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் தாராவி. சதீஷ்பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்களுடன் சுனு லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். தாராவியில் வாழும் தமிழ் பெண் கேரக்டர். பவித்ரன் மகன் அபய் இசை அமைக்கிறார். படம் பற்றி பவித்ரன் கூறியதாவது:
மும்பை தாராவி பகுதியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை பின்னணியில் படம் உருவாகியுள்ளது. அங்குள்ள கேபிள் டி.வி, தாதா ஒருவரிடம் 5 தமிழ் இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவனை அந்த பகுதியை சேர்ந்த பணக்கார கல்லூரி மாணவி காதலிக்கிறார். இதனால் 5 பேருக்குமே பல பிரச்னைகள் வருகிறது. அந்த பிரச்னைகளிலிருந்து மீண்டு அந்த பெண்ணை கைபிடிக்கிற கதை. தாராவியில் முழு படப்பிடிப்பும் நடந்துள்ளது. மும்பை தமிழர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம். என்கிறார் பவித்ரன்.