ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கைதி நம்பர் 150' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி, 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிரஞ்சீவியின் முந்தைய படத்திலும் அவரை நடிக்கக் கேட்டிருந்தனர், அப்போது நடிக்க மறுத்த இப்போது சம்மதித்துள்ளார். அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியே அவரிடம் நேரடியாக படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள்.
டோலிவுட் வட்டாரங்களில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என செய்திகள் பரவியது. ஆனால், தயாரிப்பு தரப்பில் அதற்கான எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரகுமானிடம் தொடர்ந்து இசையமைக்கப் பேசி வருவதாகவும், அவர் இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆகஸ்ட் 22ம் தேதியன்று சிரஞ்சிவியின் பிறந்த நாளில் இப்படத்தின் தலைப்பு லோகோ, முதல் பார்வை ஆகியவை வெளியாக உள்ளன.