ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள முன்னணி நடிகரான பகத் பாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாராராஜா படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் பகத் பாசில். அவர் மேலும் கூறியதாவது:
மலையாளத்தில் மட்டும் நடிக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். காரணம் மொழி பிரச்சினை. ஆனால் இயக்குனர் மோகன்ராஜா கேரளா வரையும் வந்து என்னிடம் கதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணினார். ஒரு நல்ல ப்ராஜக்டை மிஸ் பண்ண வேண்டாமுன்னு நானும் கிளம்பி வந்துட்டேன். நல்லதுக்கும், கெட்டதுக்குமான போராட்டம்தான் கதை. இதுல நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போது சொல்ல முடியாது.
ஆரம்பத்துல தமிழ்ல பேசுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். சிவகார்த்தியேன்தான் உதவி பண்ணினார். இப்போது அவர் எனது நெருக்கமான நண்பராகி விட்டார். அப்பா படத்தில் நடிக்கிற காலத்திலிருந்து நயன்தாராவை தெரியும். ஆனால் இப்போதுதான் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன்.
தமிழ் சினிமாக்கள் நிறைய பார்க்கிறேன். விசாரணை படம் என்னை மிரள வைத்த படம். நல்ல திறமைசாலிகள் சினிமாவுக்கு வர்றாங்க. புதுசு புதுசா எதையாவது செய்து ஆச்சர்யப்படுத்துறாங்க. அவர்களோடு நானும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். அதை நான் நடிக்கிற படத்தின் வெற்றிகள் தான் தீர்மானிக்கும். என்றார்.