ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, தேசியக் கொடியை துப்பட்டாவாக அணிந்து அவமரியாதை செய்ததாக, சர்ச்சை எழுந்துள்ளது.
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில், தமிழன் என்ற படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமான இவர், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான ஜெர்மனி சென்றபோது, அவரை சந்தித்த பிரியங்கா, கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தார். அதோடு கவர்ச்சியான உடையணிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதற்கு, கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, தேசியக்கொடியை துப்பட்டவாக அணிந்து, புகைப்படம் எடுத்திருந்தார். அதை, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார். பிரியங்காவின் இந்த செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சுதந்திர தினத்தன்று, நம் பாரம்பரிய உடையைக் கூட, பிரியங்கா அணியவில்லை; குறைந்தபட்சம் தேசியக்கொடியை அணிந்து, அதற்கு அவமரியாதை செய்யாமல் இருந்திருக்கலாமே என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கோபக்கார ரசிகர்கள் சிலர், நீங்கள் இந்தியாவுக்கு வர வேண்டாம் என, ஆவேசத்துடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.