ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
பிரபல காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர் அல்வா வாசு என்கிற வாசுதேவன், உடல்நலக்குறைவால் காலமானார்.
மதுரை மாவட்டம் ஹார்விபட்டியை சேர்ந்தவர் வாசுதேவன். பி.ஏ., பட்டம் பெற்ற இவர், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார். மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய வாசுதேவன், வாழ்க்கை சக்கரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும் சத்யராஜின் அமைதிப்படை படம் தான் அவரை பிரபலமாக்கியது. அந்தப்படத்தில் அவர், சத்யராஜூக்கு அல்வா செட் பண்ணி கொடுப்பார். அதனாலேயே அவருடன் அல்வா என்ற அடைமொழியும் ஒட்டிக்கொள்ள அல்வா வாசுவானார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். அதிலும் வடிவேலுவுடன் இவர் நடித்த "இங்கிலீஷ்காரன், கருப்புசாமி குத்தைக்காரன், எல்லாம் அவன் செயல்" உட்பட... பல படங்கள் காமெடியில் அவரை பிரபலமாக்கியது.
நூற்றுகணக்கான படங்களில் நடித்து, மக்களை சிரிக்க வைத்த கலைஞர், கல்லீரல் முழுமையாக செயலிழந்து மிகவும் கவலைக்கிடமான முறையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ருக்மணிபாளையத்தில் அவரது வீட்டில் காலமானார். வாசுவிற்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.
வாசுவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று(ஆகஸ்ட் 18) மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு மதுரை, தத்நேரி மயானத்தில் நடக்கிறது.