ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கோலாகலமாக துவங்கியுள்ளது.. இந்தவிழாவில் இந்தியா மற்றும் அதன் துணைக்கண்டங்களை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. உலகமெங்கிலும் இருந்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொளும் இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த திரைப்பட விழா கொண்டாட்டத்தின்போது நமது இந்திய தேசியகொடியை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் சேர்ந்து ஏற்றினார்கள். மேலும் நமது தேசிய கீதத்தை அங்குள்ளவருடன் இணைந்தும் பாடினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு நமது தேசிய கொடியை ஏற்றிய முதல் நடிகையும் இவர் தான். “70 வது இந்திய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேளையில் இங்கே நம் தேசிய கொடியை ஏற்றியது எனக்கும் எனது மகள் ஆரத்யாவுக்கும் பசுமையான நினைவுகளாக பதிந்திருக்கும்” என் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்...