சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். இந்த படங்களில் புதுப்பேட்டை-2 படம் விரைவில் உருவாகயிருப்பதாக என்று முன்பு செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அதுகுறித்த பேச்சே இல்லை.
இந்தநிலையில் சமீபத்தில், பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் தனுஷ். அப்போது புதுப்பேட்டை-2 எப்போது உருவாகிறது என்று சிலர் கேட்டனர். அதற்கு, நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் புதுப்பேட்டை. என்னை நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற செய்த படம். அண்ணன் இல்லாமல் இந்தப்படம் நிச்சயம் உருவாகி இருந்திருக்காது. அதோடு அந்த படம் வெளியானபோது ஹாலிவுட்டிலும் விமர்சிக்கப்பட்டது.
அத்தனை சிறப்பான அந்த படத்தை மீண்டும் எடுத்தால் அதை விட சிறப்பாக எடுக்க வேண்டும். கொக்கி குமாருக்கான கதையை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதல்ல. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணுவார்கள். ஆனால், அதுகுறித்து எந்த ஐடியாவும் இப்போதைக்கு எனக்கு இல்லை, எதிர்காலத்தில் எப்படி அது நடக்கிறது என்று பார்க்கலாம் என தெரிவித்தார் தனுஷ்.