ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம், சிங்கம்-2 படங்கள் ஹிந்தியிலும் உருவானது. சூர்யா ரோலில் அஜய் தேவ்கன் நடிக்க ரோகித் ஷெட்டி இயக்கினார். இந்நிலையில் இப்போது சிங்கம்-3 படம் ஹிந்தியில் ரீ-மேக்காக உள்ளது. ஆனால் அஜய்க்கு பதிலாக சன்னி தியோல் நடிக்கிறார், ரோகித்திற்கு பதிலாக ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் விரைவில் சிங்கம்-3 படத்தை இயக்குவேன் என இயக்குநர் ரோகித் ஷெட்டி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் கூறியிருப்பதாவது... "ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அது நடக்கும். சிங்கம் படத்திற்கு நிறைய ரசிகர்கள் உண்டு, அதற்கு என்று ஒரு தனி மரியாதையும் உண்டு. சிங்கம்-3 தேவை ஏற்பட்டால் நிச்சயம் சிங்கம்-3 படத்தை உருவாக்குவேன். ரசிகர்களை மகிழ்விக்கவே படங்கள் இயக்குகிறோம், ஆகையால் இதுபோன்ற படங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்குவேன். ஒருவேளை ரசிகர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நிறுத்திவிடுவேன்" என்று கூறியுள்ளார்.
ரோகித்தின் இந்த அறிவிப்பால் பாலிவுட்டில் ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. யார், சிங்கம் 3 படத்தை இயக்கபோகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.