ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். ராமேஸ்வரம் பேய்கருப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத்தில் ஏ.பி.ஸ்ரீதர் வரைந்த 95 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவரது சிலிக்கான் சிலையையும் ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்துள்ளார்.
இந்த பணியில் 15 பேர் கொண்ட குழுவினார் 4 மாதங்கள் உழைத்து இந்த ஓவியங்களையும் சிலைகளையும் உருவாக்கி உள்ளனர். நேற்று மணிமண்டபத்தை திறந்த வைத்த பிரதமர் நரேந்திர மோடி ஓவியத்தையும், ஏ.பி.ஸ்ரீதர் குழுவினரையும் பாராட்டினார். அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்துமுகமது மீரா மரைக்காயரும் ஏ.பி.ஸ்ரீதரை பாராட்டியுள்ளார்.
"இந்தியாவின் தலைசிறந்த மனிதர் அப்துல் கலாம் அய்யா அவரை பலமுறை சந்தித்து ஓவியங்கள் பரிசளித்துள்ளேன். அவரது ஓவியம் ஒன்றை வரைந்து பரிசளித்தபோது மிகவும் மகிழ்ந்து போனார். அவரது நினைவிடத்தில் அவரது ஓவியத்தை வரைய கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்" என்கிறார் ஏ.பி.ஸ்ரீதர்.