ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பழக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடந்த விசாரணையில் நடிகை காஜல் அகர்வால், ராசி கண்ணா, லாவன்யா திரிபாதி உள்ளிட்ட சில நடிகர்களின் மேனேஜர் ஆக உள்ள ரோன்சன் ஜோசப் என்பவரை போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்துள்ளனர். அவர் வீட்டிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தனது மேனேஜர் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது....
"போதை பொருள் விஷயத்தில் எனது மேனேஜர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. சமூகத்திற்கு கேடு விளைக்கும் எந்த சம்பவத்திலும் நான் ஒருபாதும் ஈடுபட மாட்டேன். என்னிடம் வேலை செய்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இல்லை. ஆகையால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் அறிவுறுத்தி உள்ளனர்".
இவ்வாறு காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.