14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துப்பறிவாளன். இதில் விஷால், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், ஜான் விஜய், கே.பாக்யராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசை அமைக்கிறார், கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் எனக்காக இல்லாவிட்டாலும் விஷாலுக்காக ஜெயிக்க வேண்டும் என்கிறார் மிஷ்கின். அவர் மேலும் கூறியதாவது:
விஷால் எனக்கு அதிக பழக்கம் கிடையாது ஏதாவது நிகழ்ச்சியில் அங்கங்கே பார்த்ததுதான். ஒரு ஹலோ சொல்லிக்குவோம் அவ்ளோதான். ஆனால் நான் பல வருஷம் உழைத்து எழுதின துப்பறிவாளன் கதைக்கு விஷால் தோற்றம் சரியா வரும்னு தோணிச்சு. போய் கேட்டேன். எப்போ சூட்டிங்னு சொல்லுங்க வர்றேன்னார். வந்த பிறகு என்னோட தம்பி ஆகிட்டார். இன்னிக்கு பெரிய பொறுப்புல இருந்தாலும் அவன் இவன்னு கூப்பிடுற உரிமையை எனக்கு கொடுத்திருக்கிறார். அதுதான் அவரோட பெருந்தன்மை.
துப்பறிவாளன் காசுக்கு பின்னால ஓடுற மனிதர்களை பற்றிய கதை. ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர ஒரு துப்பறிவாளன் நடத்தும் போராட்டம்தான் கதை என்றாலும் மனிதர்கள் ஏன் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் இடத்தில் இருந்து சொல்கிற திரைக்கதை. இந்தப் படம் எனக்காக இல்லாவிட்டாலும் என் தம்பி விஷாலுக்காகவாவது ஜெயிக்கணும். கண்டிப்பா ஜெயிக்கும் என்கிறார் மிஷ்கின்.