ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார், ஜோதிகா மற்றும் பலர் நடிக்கும் 'நாச்சியார்' படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். பாலா இயக்கத்தில் ஒரு படம் மிகவும் குறைவான நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கும் படமாக 'நாச்சியார்' உருவாகியுள்ளது.
மார்ச் மாதம் 1ம் தேதி ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு 5 மாதங்களுக்குள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக பாலா இயக்கும் படம் என்றாலே ஒரு வருடத்திற்கு அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும். ஆனால், பாலா இந்தப் படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டு சீக்கிரமே படத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
பாலா இயக்கத்தில் முதல் முறையாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். செப்டம்பர் மாத இறுதியில் இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்தால் செப்டம்பர் இறுதியில் படம் வெளிவரும்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது பற்றி ஜி.வி.பிரகாஷ், “'நாச்சியார்' படத்தின் என் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த ஞாபகங்கள் நீண்ட நாட்களுக்கு இருக்கும். நன்றி பாலா சார், ஜோதிகா மேடம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. அந்தக் குறையை 'நாச்சியார்' போக்குமா என்று பார்க்க வேண்டும்.