ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகராக இருந்த விக்ரம் பிரபு, 'ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற சொந்த பட நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் 'நெருப்புடா'. இயக்குநர் லட்சுமணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இந்தப் படத்தில் தீயணைப்பு வீரராக நடிக்கிறார் விக்ரம் பிரபு.
'சத்ரியன்' படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் தணிக்கை சமீபத்தில் முடிந்து விட்டது. 'நெருப்புடா' படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இதனால் விக்ரம் பிரபு மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் வரிவிலக்கு விஷயத்தில் நிலவும் லஞ்சம் மற்றும் வரிவிலக்கு இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.