ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஷாருக்கான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் தீவிரமானவர். அவர் தனது நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கோல்கட்ட அணியை வாங்கினார். இந்த நிறுவனத்தில் அவரது மனைவி கவுரி கானும், நடிகை ஜுகி சாவ்லாவும் பங்குதாரர்களாக உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வெற்றி பெற்றதும் தனது நிறுவனத்தின் பங்குகளை வெளியிட்டார் ஷாருக்கான். இதில் ஜுகி சால்வாவின் கணவர் நடத்தும் தி சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கு ஒரு பங்கு பத்து ரூபாய் என்கிற வீதம் 50 லட்சம் பங்குகளை விற்றுள்ளார். ஜுகி சாவ்லாவுக்கு 40 லட்சம் பங்குகள் விற்கப்பட்டது. ஷாருக் தன் வசம் ஒரு கோடி பங்குகளை வைத்துக் கொண்டார்.
ஆனால் ஒரு பங்கின் விலை சந்தை மதிப்பில் கூடுதலாக இருந்தும் அதனை குறைத்துக் காட்டி 10 ரூபாய்க்கு ஷாருக்கான் விற்றுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 73 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை ஷாருக்கான் உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு வருகிற ஆகஸ்ட் 23ந் தேதி நடக்கிறது. அப்போது ஷாருக்கான், அவரது மனைவி கவுரி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமம் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.