மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அச்சம் என்பது மடமையடா, சத்ரியன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், மஞ்சிமா மோகன். இரு படங்களுமே, எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற போதிலும், கோடம்பாக்கத்தில், அவருக்கு அதிக மவுசு உள்ளது. முன்னணி நடிகர்களில் பெரும்பாலானோர், தங்கள் படங்களில், மஞ்சிமாவை நடிக்க வைக்க, ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், மஞ்சிமாவோ, கவர்ச்சி வேடங்களில் நடிப்பது இல்லை என்ற முடிவுடன் இருக்கிறார். உதயநிதியுடன், இப்படை வெல்லும் என்ற படத்தில் மட்டுமே தற்போது நடித்து வருகிறார். இவரது சொந்த ஊர், கேரள மாநிலம் பாலக்காடு. ஆனாலும், சென்னையில் உள்ள கல்லுாரியில் படித்தவர் என்பதால், சரளமாக தமிழ் பேசத் தெரியுமாம். இது, இவருக்கு கூடுதல் பிளஸ் பாயின்டாக அமைந்துள்ளது.