ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்சர் சுனில், சமீபத்தில் நடிகர் திலீப்பிற்கு பணம் கேட்டு ஒரு மிரட்டல் கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக திலீப், காவல்துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கூறியிருந்தார் திலீப். அதன்படி நேற்று கொச்சியில் உள்ள ஆலுவா போலீஸ் கிளப்பில் வைத்து ஏடிஜிபி சந்தியா முன்னிலையில் திலீப் மற்றும் அவரது நண்பரான நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது..
நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆரம்பித்த இந்த விசாரணை நள்ளிரவு தாண்டியும் அதாவது சுமார் 12 மணி நேரம் வரை நடைபெற்றது. விசாரணையில் போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் திலீப்பும், நாதிர்ஷாவும் பதிலளித்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த திலீப், போலீசார் தன்னிடம் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் பார்க்கும்போது விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக கூறியுள்ளார். தேவைப்பட்டால் திலீப் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.