ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ஷாருக்கான் தற்போது ஜாப் ஹாரி மெட் சீஜல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானிடம், உங்கள் வாழ்க்கையை படமாக எடுக்க எந்த டைரக்டரையாவது அனுமதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஷாருக், மக்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயம் எதுவும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை. உங்களுக்கு நல்ல கதை எதுவும் கிடைக்கவில்லை என்றால், நான் வேண்டுமானால் எழுதுகிறேன். அவர்கள் அப்படி என்ன என்னை பற்றி படமாக எடுக்கப் போகிறார்கள். எனது வாழ்க்கையின் வெற்றியின் கதையாக தான் இருக்கும்.
அந்த மிகவும் போராக இருக்கும். ஒருவேளை அது சர்ச்சையாக்கப்படலாம். அப்படி சர்ச்சையாகா விட்டால் அது போரான கதையாக தான் இருக்கும். நிஜமாகவே வெற்றி கதைகள் அனைத்தும் போரான கதைகளாகவே இருக்கும் என்றே நான் சொல்வேன். அதனால் அத்தகைய கதையை யாரும் எடுப்பதை நான் விரும்பவில்லை. அதே சமயம் என் வாழ்க்கை படத்தை யாரும் எடுக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு என் வாழ்க்கை இதுவரை பெரிய விஷயமாக இருந்ததில்லை என்றார்.