ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. முதல் படமே அவருக்கு ஹிட்டாக அமைந்தது. என்றாலும் அதன்பிறகு நடித்த யாகவராயினும் நா காக்க, கோ-2, கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்கள் தோல்வியடைந்து அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தன. இந்தநிலையில், ஆதியுடன் அவர் நடித்து சமீபத்தில் வெளியான மரகத நாணயம் வெற்றி பெற்று தற்போது தமிழ் சினிமா மீது நிக்கி கல்ராணிக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
மேலும், இந்த படத்தைத் தொடர்ந்து நெருப்புடா, கீ, ஹரஹர மகாதேவகி, பக்கா என நான்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நிக்கி கல்ராணி, சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருவதாக சொல்கிறார். அதோடு, இப்போது நான் நடித்து வரும் படங்கள் அனைத்துமே நல்ல கதைகளில் உருவாகி வருவதால் அடுத்தடுத்து எனக்கு ஹிட் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதன்காரணமாக, இதுவரை ஹோட்டல்களில் தங்கியபடியே தமிழ்ப்படங்களில் நடித்து வந்த நான் இப்போது சென்னையில் புதிய வீடு வாங்கி குடியேறி விட் டேன் என்கிறார் நிக்கி கல்ராணி.