காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பிவிஆர் சினிமா சென்னை விமான நிலையம் அருகில் பிவிஆர் சினிபிளெக்ஸ் என்ற தியேட்டர் வளாகத்தை திறந்துள்ளது. இதில் 5 திரையரங்குகள் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து படம் பார்க்கலாம். இதனை தொடங்கி வைத்து நடிகர் அர்ஜுன் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளேன். இந்த திரையரங்குகளில் ஒளி, ஒலி நுட்பத்தை கண்டு வியப்படைந்தேன். புதிய திரையரங்கங்கள் தொடங்குவது சினிமாவின் வளர்ச்சிக்கு பலம் சேர்த்து, திருட்டு சிடி மற்றும் சினிமாவை அழிக்க நினைக்கும் வேறு சில சக்திகளையும் கட்டுப்படுத்த பெருமளவு உதவும்.
இதற்காக திரையரங்குள் பெருக வேண்டும். எங்களது நிபுணன் வரும் ஜூலை 7 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது . பெரும் உழைப்பையும் நம்பிக்கையையும் முதலீடு செய்து எடுத்துள்ள இப்படத்தை மக்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் அர்ஜுன்.
விழாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் அருண் வைத்தியநாதன், பிவிஆர் சினிமாவின் தென்னிந்திய பொது மேலாளர் ராஜிந்தர் சிங், மார்க்கெட்டிங் தலைவர் மீனா சாபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.