ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சட்ட விரோதமாக, அனுமதியின்றி கட்டப்பட்ட, பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சியின் பங்களாவை, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி, 49; லகே ரஹோ முன்னாபாய், முன்னாபாய் எம்.பி.பி.எஸ்., உட்பட, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து உள்ளார். மும்பை வெர்சோவா பகுதியில், ஏர் - இந்தியா நிறுவன ஊழியர் ஒருவரிடமிருந்து, ஒரு பங்களாவை சமீபத்தில், வார்சி வாங்கினார். இந்த பங்களாவை புதுப்பிக்க முடிவு செய்தார். அப்போது, மாநகராட்சியின் அனுமதியின்றி, விரிவுபடுத்தி கட்டினார். இது குறித்து, ஏர் - இந்தியா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், மும்பை மாநகராட்சியில் புகார் செய்தது.
இது பற்றி விசாரித்த மாநகராட்சி நிர்வாகம், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்க முடிவு செய்தது. வார்சியின் பங்களாவை இடிக்க, புல்டோசருடன், அதிகாரிகள் சென்றனர்; ஆனால், வீட்டில் யாரும் இல்லை; வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதியை, அதிகாரிகள் இடித்தனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டில், நடிகர் வார்சி இல்லாததால், ஒரு பகுதியை மட்டும் இடித்தோம். மற்ற பகுதிகள், விரைவில் இடிக்கப்படும் என்றார்.