ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் தற்போது பயோபிக் சீசன். விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள்.... என பலரது வாழ்க்கை படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் பாட்னாவை சேர்ந்த கணித புலி ஆனந்த குமாரின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது.
கணிதத்தில் கில்லாடியான ஆனந்த், ஐஐடி.,யில் 30 வகையான புரொகிராம் எழுதியிருக்கிறார். இதுதவிர பல்வேறு கல்வி நிலையங்களில் ஆலோசகராக உள்ளார். இவரது வாழ்க்கையை குயின், ஷாந்தார் போன்ற படங்களை இயக்கிய விகாஷ் பெகல் சினிமாவாக எடுக்க உள்ளார். இதில் ஆனந்த் ரோலில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. படத்திற்கு சூப்பர் 30 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.