ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய தேதியில் படங்களை தயாரிக்கும் நிறுவனங்களை விட படங்களை வெளியிடும் நிறுவனம் தான் வியாபார சந்தையில் முதல் ஆளாக பார்க்கப்படுகிறது. தியேட்டர்களும் விநியோகஸ்தர்களும் மட்டுமல்ல, ரசிகர்களும் கூட படத்தை எந்த நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என பார்த்து தியேட்டருக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்தாலும் பாலிவுட்டில் ஒரு நல்ல வெளியீட்டாளர் என்கிற பெயரையும் கரண் ஜோகர் தக்கவைத்திருக்கிறார்.
அதனால் தான் 'பாகுபலி-2' படத்தை பாலிவுட்டில் வழங்குபவராக கரண் ஜோஹரிடம் படத்தை ஒப்படைத்தார்கள். இதற்காக ஒரு பைசா கூட கரன் ஜோஹர் கொடுக்கவில்லையாம். மாறாக கரண் ஜோஹரின் பெயரும் பப்ப்ளிசிட்டியும் தான் முதலீடாக இருந்தது. அதுதான் 'பாகுபலி-2'வுக்கு நிறைய தியேட்டர்களையும் நல்ல ஓப்பனிங்கையும் ஏற்படுத்தி கொடுத்தது. பாலிவுட்டில் சுமார் 500 கோடி வசூலை தாண்டிய இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் பங்கு மட்டும் சுமார் 250 கோடியை தொட்டுள்ளதாம். இதில் கரண் ஜோஹரின் பத்து சதவீத கமிஷன் 25 கோடி ரூபாய் சுளையாக அவரது கல்லாப்பெட்டிக்கு வந்து சேர்ந்துள்ளது என வாயை பிளக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்..