ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விதார்த், டப்பிங் ஆர்ட்டிஸ் ரவீனா ரவி நடித்துள்ள படம் ஒரு கிடாயின் கருணை மனு. சுரேஷ் சங்கய்யா இயக்கி உள்ளர், ஆர்.ரகுராம் இசை அமைத்துள்ளார், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
காணாமல் போன தனது செல்ல ஆட்டுக்குட்டியை தேடிச் செல்லும் ஒருவனின் கதை. காணாமல் போன ஆடு இன்னொருவரால் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. கோவிலில் பலியாவதிலிருந்து ஆடு எப்படி காப்பாற்றப்படுகிறது என்கிற பதை. படம் தயாராகி ஒரு வருடத்துக்கு மேலாகிறது.
இதுவரை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருகளை பெற்றுள்ளது. தணிக்கை குழுவிடம் மாட்டி பிறகு மறு தணிக்கை செய்யப்பட்டு படம் வெளிவந்தது. பலமுறை தியேட்டர்களில் வெளியிட திட்டமிடப்பட்டு தள்ளிப்போடப்பட்டு வந்த இந்தப் படம் வருகிற ஜூன் 2ந் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படத்துக்கு கிடைத்த மரியாதை அளவுக்குள் அடங்காதது. கோடை விடுமுறையில் குழந்தைகள் மட்டுமின்றி , பெரியவர்களும் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பர். கிராமிய பின்னணியில் இருந்து வந்து தற்போது நகரத்தில் வாழ்வோருக்கு தங்களுடைய கிராமிய நினைவுகளை பசுமையாக மீண்டும் நெஞ்சில் பூக்க வைக்கும் "ஒரு கிடாயின் கருணை மனு" என்கிறார் ஈரோஸ் நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அதிகாரி சாகர் சத்வானி.