ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருதற்கான அறிகுறிகள் பலமாகவே தெரிய ஆரம்பித்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன் ரசிகர்களை சந்தித்த ரஜினி இதற்கான விதைகளை தூவினார். ரசிகர்களை போருக்கு தயாராக இருங்கள் என்றார். பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்த தீவிரமாக யோசித்து வரும் ரஜினி தனது நெருங்கிய நண்பர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றார். ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவும் அதனை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் ரஜினி தனது நண்பர் தமிழுருவி மணியனை அழைத்து ஆலோசனை நடத்தினார். இருவரும் சுமார் ஒன்னறை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ரஜினி நான் அரசியலுக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும். யார் எதிரியாவார்கள், யார் நண்பன் ஆவார்கள். வந்தால் தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி? மக்களுக்கு என்ன செய்ய வேண்டும். எந்தெந்த பிரச்சினையில் என்ன மாதிரி நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து தமிழுருவி மணியன் கூறியதாவது: எங்கள் சந்திப்பு 90 நிமிடங்கள் நடந்தது. தமிழகம் மற்றும் தேசிய அரசியல் நிலவரங்கள் பற்றிப் பேசினோம். ரஜினியிடம் தெளிந்த அரசியல் பார்வை இருக்கிறது. அவருடைய பேச்சில், கருத்தில் தெளிவு இருக்கிறது. எல்லாவற்றையும் நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளார். சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். மதவாத வகுப்புவாத சக்திகளின் கையில் மட்டும் சிக்கி விடாதீர்கள் என்று அவரிடம் நான் கூறினேன். என்றார் தமிழருவி மணியன்.