ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று ஆரம்பமானது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மும்பை சென்றார். இந்தப் படத்தின் நாயகி யார் என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தி நடிகை ஹுமா குரேஷி நாயகியாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், தயாரிப்பு தரப்பிலிருந்து இன்னும் அதை உறுதி செய்யவில்லை. ஆனால், படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகையான அஞ்சலி பாட்டீல் நடிக்க உள்ளார். இது பற்றி அவரும் உறுதி செய்துவிட்டார்.
“இந்த வருடத்தின் அடுத்த படம், ஒரே ஒரு 'தலைவர்' உடன், 'காலா' என தன்னுடைய டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி படங்களில் நடித்த அனுபவம் கொண்ட அஞ்சலி பாட்டீல் தமிழில் அறிமுகமாகும் படம் இது.
'கபாலி' படத்தில் நடித்த நடிகர்களில் ரஜினிகாந்தைத் தவிர வேறு யாரையும் படத்தில் நடிக்க வைப்பதில்லை என இயக்குனர் ரஞ்சித் முடிவெடுத்துள்ளார். தற்போதைக்கு மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் சமுத்திரக்கனி தேர்வாகியுள்ளார். அவர் இன்று மும்பையில் ஆரம்பமாகும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
விரைவில் மற்ற நடிகர், நடிகைககளைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.