ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராதிகாவின் வாணி ராணி சீரியலில் நடித்து வந்தவர் சபீதா ராய். அவருக்கும், அந்த சீரியலின் புரொடசன் மேனேஜர் சுகுமாறனுக்கும் ஏற்பட்ட கைகலப்பு வீடியோ வைரலாக பரவியது. அதையடுத்து அவர்களுக்கிடையே கள்ளக்காதல் இருப்பதாகவும் செய்தியானது. ஆனால் அதை சபீதா ராய் கண்ணீல் மல்க மறுத்தார். எனக்கு தரவேண்டிய பணத்தை வாங்கச்சென்ற இடத்தில்தான் கைகலாப்பாகி விட்டது என்று கூறியிருந்தார் சபீதாராய்.
அதைத் தொடர்ந்து அவர் வாணி ராணி சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். புதிய சீரியல்களுக்கும் யாரும் அவரை புக் பண்ணவில்லை. அதனால் சீரியல்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்க வேண்டாம் என்று தற்போது மிஷ்கின் இயக்கி வரும் துப்பறிவாளன் படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் சபீதாராய். சின்னத்திரையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சபீதாராய், தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.