ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் திலகம் சிவாஜியின் ஆஸ்தான இயக்குனர் சி.வி.ராஜேந்திரன். சிவாஜியை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். அவர் இந்தியில் வெளியான காளிச்சரன் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். அதில் சிவாஜி நடிப்பது உறுதியானது. அந்தப் படத்தில் சிவாஜி கேரக்டருக்கு இணையான இன்னொரு கேரக்டர் ஒன்று இருந்தது. இந்த கேரக்டருக்கு அப்போது முன்னணியில் இருந்த பல ஹீரோக்கள் பரிசீலிக்கப்பட்டார்கள். ஆனால் யாரும் சரியாக இல்லை.
ஒரு நாள் சி.வி.ராஜேந்திரன், சிவாஜி வீட்டுக்கு சென்றபோது பிரபு அங்கு ஈட்டி எரிதல் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அவரின் கட்டுமஸ்தான உடம்பைக் கண்ட சி.வி.ராஜேந்திரன், பிரபுதான் சிவாஜியுடன் நடிக்க சரியானவர் என்று முடிவு செய்தார். சி.வி.ராஜேந்திரனும், சிவாஜியின் தம்பி சண்முகமும், பிரபுவை அழைத்துக் கொண்டு போய் சிவாஜி முன் நிறுத்தினார்கள். "அண்ணே இவர்தான் சங்கிலி படத்தில் உங்களுடன் நடிப்பவர்" என்றார்கள், சிவாஜிக்கு அதிர்ச்சி.
"எம் புள்ளையையும் அரிதாரம் பூசச் சொல்றீங்களா. நான் தான் போலீசா நடிச்சேன். அவனையாவது நிஜத்துல போலீஸ் ஆக்கி பாக்கணும்னு நினைச்சிட்டிருக்கேன். அவனையும் நடிகனாக்க பார்க்குறீங்களா?" என்று கோபப்பட்டிருக்கிறார். பிறகு ஒரு வழியாக சமாளித்து சம்மதிக்க வைத்தார்கள். "இந்த படத்துல எப்படி நடிக்கிறான்னு பார்ப்பேன். நல்லா நடிக்கலேன்னா ஷூட்டிங் பக்கமே அவன் வரக்கூடாது" என்ற நிபந்தனையோடு சம்மதித்தார்.
சங்கிலி படத்தில் பிரமாதமாக நடித்தார் பிரபு. அதனால் சிவாஜி, பிரபு தொடர்ந்து நடிக்க சம்மதித்தார். இருவரும் இணைந்த சந்திப்பு, மிருதங்க சக்ரவர்த்தி, வெள்ளை ரோஜா படங்களில் நடித்தனர். அதன்பிறகு பிரபு தனக்கென தனி பாதை அமைத்துக் கொண்டு 200 படங்களில் நடித்து முடித்து விட்டார்.