ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் காதல் திருமணம் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமாக இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. அதனால், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் படப்பிடிப்பிற்கு ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமந்தா தற்போது தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் நடிக்கும் முடிவில் தான் இருக்கிறார். அவர் கைவசம் தற்போது தெலுங்கில், “ராஜு காரி காதி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு ராம்சரண் ஜோடியாக ஒரு படத்திலும், சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்திலும் நடிக்க உள்ளார்.
தமிழில் விஜய்யுடன் ஒரு படம், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளார். அநீதிக் கதைகள், இரும்புத் திரை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் படத்தில் நடிக்க அடுத்த மாதம் முதல் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதன் பின் செப்டம்பர் மாதத்திற்குள் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க வருவாரா, அல்லது அநீதிக் கதைகள், இரும்புத் திரை ஆகிய படங்களை முடித்துக் கொடுப்பாரா என்பது புரியாத புதிர்தான். அப்படியே நடிக்க வந்தாலும் மூன்று மாதத்திற்குள் நான்கு தமிழ்ப் படங்களில் நடித்து முடிக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே, ஷுட்டிங் ஆரம்பித்த படங்களுக்கு சமந்தா முன்னுரிமை கொடுப்பாரா, அல்லது இனி ஆரம்பிக்கப் போகும் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பாரா என்பதுதான் கேள்வியே.