ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தோனி படத்திற்கு பிறகு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களையே தேர்வு செய்து நடித்து வரும் சுஷாந்த் சிங் ராஜ்புட், அடுத்தப்படியாக ஒரு படத்தில் சம்பல் பள்ளத்தாக்கு வழிப்பறி கொள்ளையனாக நடிக்க உள்ளார். இயக்குநர் அபிஷேக் சவுபே, ஒரு படத்தை இயக்க உள்ளார். இது கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட கதை. இதை ரோனி ஸ்ரூவாலா தயாரிக்க உள்ளார்.
இதுப்பற்றி இயக்குநர் அபிஷேக் கூறியிருப்பதாவது... "படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து நான் தயார் செய்த கதையை அவரிடம் காண்பித்தேன். அவரும் படித்து பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். எல்லாம் சரியாக சென்றால் வருகிற டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம், இது ஒரு ஆக்ஷ்ன் படம், நிச்சயம் இந்த ரோலுக்கு சுஷாந்த் சிங் சரியாக இருப்பார்" என்றார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட், தற்போது ராப்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.