ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட். சில தினங்களுக்கு முன்னர் இவர், அமிஷ் திரிபாதி எழுதியுள்ள சீதா - வாரியர் ஆப் மிதிலா புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆலியா பட், தனக்கு சீதா வேடத்தில் நடிக்க ஆசை என்றார்.
இதுகுறித்து ஆலியா பட் மேலும் கூறியிருப்பதாவது... "இந்த புத்தகத்தை யாராவது படமாக இயக்கினால், அதில் நான் சீதா வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். சீதாவை பற்றி அறிந்திராத பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்திய புராணங்களில் ராமாயணம் முக்கியமானது. அப்படிப்பட்ட ராமாயணத்தை மக்கள் திரையில் கண்டால் நிச்சயம் ரசிப்பார்கள். சீதா ஒரு நல்ல அரசியாகவும், பாதுகாவலராகவும் இருந்தார்" என்றார்.
ஆலியா பட் அடுத்தப்படியாக ரன்பீர் கபூர் நடிக்க உள்ள டிராகன் படத்தில் நடிக்க இருக்கிறார்.