ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை தினமும் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 3 மாவட்ட ரசிகர்கள் வீதம் வருகிற 19ந் தேதி வரை 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுக்க திட்டமிட்டிருக்கிறார். முதல் நாளான நேற்று முன்தினம் கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல் மாவட்ட ரசிகர்கள் சுமார் 750 பேருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இரண்டாவது நாளான நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மாவட்ட ரசிகர்கள் சுமார் 700 பேருடன் அவர் போட்டோ எடுத்துக் கொண்டார். இதற்காக காலை 9 மணிக்கு அவர் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வந்தார். முதல் நாள் கருப்பு கலரில் உடை அணிந்து வந்தவர் நேற்று பளிச் வெள்ளை நிறத்தில் வந்தார். முதல் நாளை விட நேற்று படு உற்சாகமாக காணப்பட்டார்.
ரஜினி மண்டபத்துக்குள் வந்ததும், மீடியாக்கள் சூழ்ந்து கொண்டு நேற்றைய அவரது பேச்சு பற்றியும், அதற்கு எழுந்துள்ள விமர்சனங்கள் பற்றியும் சரமாரியாக கேட்டனர். ஆனால் ரஜினி "மகிழ்ச்சி, சந்தோஷம்" என்று சிரித்தபடி கூறிவிட்டு மண்டபத்திற்குள் சென்று விட்டார்.
நேற்று நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் அன்பை கண்டு ரஜினி நெகிழ்ந்தார். பின்னால் காத்திருந்த ரசிகர்கள் சிலர் "வருங்கால முதல்வர் ரஜினி" என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். ரஜினி தனது உதவியாளரை அப்படி கோஷமிடக்கூடாது என்று அவர்களிடம் சொல்லுங்கள் என்று கூறினார். உதவியாளர் கோஷமிட்டவர்களிடம் ரஜினியின் விருப்பத்தை சொன்னதும் அமைதியானார்கள். இந்த சந்திப்பின் இரண்டாவது கட்டம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அப்போது மீதமுள்ள மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி.