ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சின்னத்திரையில் இருந்து ரம்யா, அஞ்சனா போன்ற தொகுப்பாளினிகள்தான் சமீபகாலமாக பங்கேற்று வருகிறார்கள். ஆனால், சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஏன்டா தலையில எண்ண வைக்கல படத்தின் ஆடியோ விழாவுக்கு எதிர்பாராதவிதமாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வந்திருந்தார்.
அப்போது அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதையடுத்து பேசிய பாவனா பாலகிருஷ்ணன், நான் இதுவரை எந்த சினிமா படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு திடீரென்று அழைத்தபோது என்னை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதனால் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்க வேண்டியுள்ளது. அதன்காரணமாகத்தான் உங்களை அழைத்தோம் என்று சொன்னார். நான் இந்த ஆடியோ விழாவிற்குள் வந்தது இப்படித்தான் என்று கூறிய பாவனா, தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி தொகுத்து வழங்கினார்.