ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 61-வது படத்தில் மூன்று வேடங்களில் நடக்கிறார் விஜய். அதில் அப்பா விஜய் மதுரையைச் சேர்ந்தவராக, நடிப்பது போன்ற காட்சிகள்தான் முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சிகளை மதுரையில் படமாக்காமல் சென்னையை அடுத்துள்ள பனையூரில் படமாக்கினார் அட்லி. கிராம மக்களுக்கு பள்ளிக்கூடம், மருத்துவ மனைகளை விஜய் கட்டிக்கொடுப்பது போன்ற காட்சிகள் படமானது. அப்போது விஜய்யுடன் நித்யாமேனனும் நடித்து வந்தார்.
அதையடுத்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தநிலையில், தற்போது ஐரோப்பா சென்றுள்ளது விஜய் படக்குழு. அங்கு விஜய்-காஜல் அகர்வால், சமந்தா நடிக்கும் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகள் படமாகிறது. அதன்பிறகு விஜய் 61வது படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் நிஜமாலுமே மதுரையில் நடத்தப்பட உள்ளது. வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து விட்டு சொந்த ஊருக்கு வரும் இளவட்ட விஜய், ஊர்மக்களுக்கு மருத்துவத்துறையில் நிகழ்ந்து வரும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சிகள் அங்குதான் படமாகிறதாம்.