ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோவையில் இருந்து சென்னை வந்தபோது ஹிப்ஹாப் தமிழா உள்பட சில ஆல்பங்களுக்கு இசையமைத்திருந்தார் ஆதி. அதிலுள்ள பாடல்களை கேட்டு விட்டு பலரும் வித்தியாசமாக இருப்பதாக அவரிடம் சொன்னார்களாம். ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா மட்டும், நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் இசையமைப்பாளராக வருவீர்கள் என்று சொன்னாராம். அப்போதுவரை எதிர்காலத்தில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல்தான் இருந்தாராம் ஆதி.
ஆனால், அதன்பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆல்பத்தை கேட்ட விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்த ஆம்பள படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார். அதையடுத்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை-2, கவண் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமான அவர், மீசை முறுக்கு என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். ஆக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா கண்டிப்பாக நீங்கள் இசையமைப்பாளராக வருவீர்கள் என்று சொன்னது போலவே சினிமாவில் இசையமைப்பாளராகி விட்டார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவர் சொன்னது போலவே நான் இசையமைப்பாளராகி விட்டேன். அப்படி இசையமைப்பாளர் ஆனதினால்தான் தற்போது ஹீரோவாகியிருக்கிறேன். நான் இசையமைப்பாளராகியிருக்கா விட்டால் இதெல்லாம் சாத்தியமாகியிருக்காது. இப்படி சொல்லும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ரெஹானா அக்காள் என் வாழ்வில் மறக்க முடியாத நபராகி விட்டார் என்கிறார்.