ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்து வரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் பாராட்டி மகிழ்கிறார்கள். ஆனால் சக இயக்குநர்களால் எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்துள்ள வெற்றியை சகித்துக்கொள்ள முடியவில்லை. மற்ற இயக்குநர்களை நக்கலடிப்பதையே வேலையாக வைத்துள்ள ராம்கோபால்வர்மா பாகுபலி- 2 படம் பற்றி நக்கலடித்தார்.
அவரைப்போலவே, பாகுபலி 2 படத்துக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தங்கர் பச்சானும் தன்னுடைய கடுப்பை பதிவு செய்துள்ளார்.
"மக்கள் வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம், என்றைக்கு உருவாகுமோ அன்றைக்குத்தான் அரசியலிலும் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்று பொருள். அதுவரை பாகுபலி போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களை சீரழித்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்” என்று 'பாகுபலி 2' படத்தின் வெற்றி பற்றி தங்கர் பச்சான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாகுபலி 2 படம் இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.