ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கியவர் பா.ரஞ்சித். அந்த படம் ஹிட்டடித்ததால் மறுபடியும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குமாறு ரஜினியின் மருமகன் தனுஷ் கேட்டுக்கொண்டதை அடுத்து அதற்கான கதை வேலைகளில் பல மாதங்களாக ஈடுபட்டு வந்த டைரக்டர் ரஞ்சித், விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு துரிதமாக நடந்து வருகிறது.
மேலும், ரஜினியின் புதிய படமும் கபாலி போலவே கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதுகுறித்து டைரக்டர் ரஞ்சித் தரப்பில் விசாரித்தபோது, கபாலி படத்தில் கேங்ஸ்டராக நடித்த ரஜினி புதிய படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையில் நடிக்கிறார். மீண்டும் வயதான கெட்டப்பில் நடித்தபோதும், கபாலி கதைக்கும் இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது என்கிறார்கள்.
அதோடு, பாட்ஷா படப்பிடிப்பு நடைபெற்ற மும்பை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போவதாக பரவிவரும் செய்தியிலும் உண்மையில்லை. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள கடப்பா பகுதிகளில்தான் நடைபெறுகிறது. அதற்கான செட் போடும் பணிகள் நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது என்கிறார்கள்.