ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில நாட்களுக்கு முன் தனது மேனேஜரான ரேஷ்மா ஷெட்டியை அந்த பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அதற்கு காரணம் ரேஷ்மா ஷெட்டி, சல்மான் கானின் நிகழ்ச்சி நிரல்களை தனது வசதிப்படி தனிச்சையாக அமைத்து வந்தார் என்றும், இதன்மூலம் சல்மானை அவரது குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் சல்மான் கானின் குடும்பத்தினர் கூட சல்மான் கானை பார்ப்பதற்கு க்யூவில் நிற்கவேண்டிய நிலைமையை உருவாக்கினார் என்பதால் தன்னிடம் ஒன்பது வருடங்களாக மேனேஜர் ஆக இருந்த ரேஷ்மா ஷெட்டியையே தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கி; இந்த அதிரடி நடவடிக்கையை சல்மான் எடுத்தார் என சொல்லப்பட்டது..
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அடுத்ததாக தனது பாதுகாவலர்களிலும் மூன்று பேரை வேலையை விட்டு நீக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சல்மான் கான்.. இந்த மூவரும் சல்மான் கானின் பெர்சனல் விஷயங்களை வெளியில் கசிய விட்டார்கள் என்றும், அதனால் சல்மான் கான் சில சங்கடங்களை சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால் சல்மான் கானின் பாதுகாவலாரக முதலில் இருந்தே இருக்கும் அய்தே சேரா என்பவர் மட்டும் எப்போதும்போல சல்மானின் நம்பிக்கைக்குரியவராக பணியில் தொடர்கிறாராம். சல்மான் கானின் இந்த நடவடிக்கை மற்ற பாலிவுட் நடிகர்களையும் உஷார் படுத்தியுள்ளதாம்.