மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
பாகுபலி ஜூரம் இந்தியா முழுக்க தொற்றிக் கொண்டுள்ளது. படம் நாளை வெளியாக இருப்பதால் படத்திற்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். சென்னையில் பாகுபலி-2 திரையிடப்பட உள்ள அனைத்து மால் தியேட்டர்களிலும் டிக்கெட் புல்லாகி விட்டன. தமிழகத்தை விட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் பாகுபலிக்கான ஜூரம் அதிகம் காணப்படுகின்றன.
அதிலும் ஐதராபாத்தின், நெக்லெஸ் சாலையில் உள்ள பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை 7 மணி முதலே ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர். அப்படி நின்ற வரிசை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு நீண்டது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு டிக்கெட் முன்பதிவுகள் நடந்தன.
பாகுபலி மீது எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே சாட்சி...!