ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் வினோத் கண்ணாவின் மறைவையொட்டில் பாகுபலி-2 படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் வினோத் கண்ணா. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வினோத் கண்ணா, சிகிச்சை பலன் இன்றி இன்று இறந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த், கரண் ஜோகர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் பாகுபலி-2 படம் நாளை உலகம் முழுக்கவும், சில வெளிநாடுகளில் இன்றும் ரிலீஸாக இருக்கிறது. ஹிந்தியில் வெளியாகும் பாகுபலி-2 படத்தை கரண் ஜோகர் வெளியிடுகிறார். இதையொட்டு இன்று சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வினோத் கண்ணாவின் மறைவால் அந்தக்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரண் ஜோகர் கூறியிருப்பதாவது... ‛‛பாலிவுட்டின் சிறந்த நடிகரான வினோத் கண்ணாவின் மறைவு, அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒருசிறந்த நடிகரை இழந்துவிட்டோம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நடைபெற இருந்த பாகுபலி படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.