ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இந்தியத் திரையுலகில் இதுவரை எந்த ஒரு படமும் முதல் நாளில் 100 கோடி ரூபாயை வசூலித்தது இல்லை. ஹிந்திப் படங்கள் கூட மூன்று, நான்கு நாட்களில்தான் 100 கோடி ரூபாயை வசூலிக்கும். இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படமாக 2014ம் ஆண்டு வெளிவந்த 'ஹேப்பி நியூ இயர்' படம் உள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் 45 கோடி ரூபாய். முதல் வாரம், முதல் வார இறுதி வசூலில் 'சுல்தான்' படம் தான் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
இந்த இரண்டு வசூல் சாதனைகளையும் 'பாகுபலி 2' முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் முதலில் 6000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 8000 தியேட்டர்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், முதல் நாளிலேயே 'பாகுபலி 2' படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இந்தியத் திரையுலகத்தில் புதிய சாதனையை நிகழ்த்தும் எனச் சொல்கிறார்கள்.
அப்படி ஒரு சாதனை நிகழ்ந்தால் அதை நிகழ்த்திய பெருமை ஒரு தெலுங்குப் படத்திற்கே கிடைக்கும். இருந்தாலும் பாலிவுட்டினர் இப்படி ஒரு முதல் சாதனையை ஹிந்திப் படம்தான் நிகழ்த்த வேண்டும் என்ற பொறாமையுடன் இருந்து கொண்டிருக்கிறார்கள்.